
செய்திகள் தமிழ் தொடர்புகள்
ஏர் இந்தியா விமானம் சென்னையில் திடீர் தரையிறக்கம்
சென்னை:
திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இந்த விமானத்தில் கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி ராபர் ப்ரூஸ், கேரள எம்பிக்கள் கேசி வேணுகோபால், கொடிக்குனில் சுரேஷ், அதூர் பிரகாஷ், கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இருந்தனர்.
திருவனந்தபுரத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் டெல்லிக்கு புறப்பட்டசில நிமிடங்களிலேயே கடுமையான காற்றழுத்தம் ஏற்பட்டது. இதனால், விமானத்தை சென்னைக்கு திருப்புவதாக விமானி அறிவித்தார்.
சுமார் 2 மணிநேரம் வானில் வட்டமடித்தபடி சென்னை விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரினார். விமானத்தை தரையிறக்க முயன்ற போது, அதே ஓடுபாதையில் மற்றொரு விமானம் இருந்ததாக அறிவிக்கப்பட்டது.
விமானத்தை மீண்டும் மேலே எழுப்பி மீண்டும் பாதுகாப்பாக தரையிறக்கினார் பைலட். இதனால், விமானத்தில் இருந்த எம்பிக்கள் உள்ளிட்ட பயணிகள் பீதியடைந்தனர்.
இது குறித்து காங்கிரஸ் எம்பி கேசி. வேணுகோபால்வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், 'பயங்கரமான அனுபவம். விமானியின் தைரியமான முடிவு பலரின் உயிரைக் காப்பாற்றியது எனக் குறிப்பிட்டுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 9, 2025, 5:32 pm
சென்னை மாநகரில் ஆகஸ்ட்11 முதல் குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கம்
August 8, 2025, 8:58 pm
தருமபுரி, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
August 8, 2025, 5:09 pm
நடப்பு கல்வியாண்டு முதல் பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து: அமைச்சர் அன்பில் மகேஸ்
August 8, 2025, 11:54 am
கவின் ஆணவக் கொலை: கைதான எஸ்ஐ, மகன் நீதிமன்றத்தில் ஆஜர்
August 8, 2025, 8:35 am
போலீஸ் பெயரில் போலி அடையாள அட்டையுடன் வலம் வந்த நகைக்கடை உரிமையாளர் கைது
August 6, 2025, 1:48 pm