நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீண்ட கால பகைமை காரணமாக மாற்றுதிறனாளி ஆடவர் மீது சுடு நீர் ஊற்றப்பட்டது: போலீஸ் 

கோலாலம்பூர்: 

நீண்ட கால கருத்து வேறுபாடு காரணமாக மாற்றுத்திறனாளி ஆடவர் மீது பெண் ஒருவர் சுடுநீரை ஊற்றினார் என்று காவல்துறை தரப்பு தெரிவித்தது. 

ஆரம்ப கட்ட விசாரணையில் கடந்த மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதனால் இந்த சம்பவம் அரங்கேறியதாகவும் பாராட் டாயா மாவட்ட காவல்துறை தலைவர் சூப்ரிடென்டன்ட் கமாருல் ரிஸால் கூறினார். 

இதுவரை காவல்துறையினர் மூவரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது. குற்றம் செய்த நபருக்கு எதிராக தடுப்புக் காவல் நீட்டிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். 

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை மூளை வளர்ச்சி குன்றிய நபர் மீது சீன பெண் ஒருவர் சுடுநீரை ஊற்றிய விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset