செய்திகள் மலேசியா
நமக்காக போராட அமைச்சரவையில் தமிழ் அமைச்சர் இல்லை: இராஜசேகரன் ஆவேசம்
கோலாலம்பூர்:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அமைச்சரவையில் நமக்காக போராட தமிழ் அமைச்சர் இல்லை.
இது ஒட்டுமொத்த தமிழர்களுக்கு பெருத்த வேதனையாகும் என்று மலேசிய இந்திய சிகை அலங்கரிப்பாளர் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர். இராஜசேகரன் தெரிவித்தார்.
அமைச்சரவையில் மனிதவள அமைச்சராக சிவக்குமார் இருந்தபோது இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு 7,500 அந்நியத் தொழிலாளர்களை பெற்றுத் தந்தார்.
ஆனால் இன்று வரை மூன்று தொழில் துறைகளுக்கு 300 பேர் கூட கிடைக்கவில்லை.
இப்போது எங்களுக்கு உதவி செய்ய எந்தவொரு இந்திய அமைச்சர் குறிப்பாக தமிழ் அமைச்சர் இல்லை.
தமிழ் அமைச்சர் இருந்தால் எங்களுக்கு உதவி புரிவார். ஆனால் எங்களுக்கு உதவ யாரும் இல்லை.
முன்னாள் மனிதவள அமைச்சர் சிவகுமார் மீண்டும் களத்தில் இறங்கி இந்திய தொழில் துறைகளுக்கு உதவ வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.
இப்போதுள்ள அமைச்சர்களையும் துணையமைச்சர்களையும் சந்திக்க முடியவில்லை.
Protocol படி அனுமதி வாங்கி கொண்டு வாருங்கள் என்று அமைச்சின் அதிகாரிகள் உத்தரவு போடுகிறார்கள்.
தேர்தல் நேரத்தில் எங்களிடம் portocal வாங்கிவிட்டா வாக்குகள் கேட்டார்கள்.
துன் சாமிவேலு, டத்தோஸ்ரீ சுப்பிரமணியம், டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், சிவகுமார், குலசேகரனை நாங்கள் சந்திக்கும் போது எந்தவொரு portocal பார்த்து இல்லை.
எங்கள் பிரச்சினை குறித்து பேச வருகிறோம் என்றால் உடனே வாருங்கள் என்பார்கள்.
இந்த நிலை மாற வேண்டும். இந்திய தொழில் துறைகளுக்கு விடிவுகாலம் பிறக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 11:34 pm
மடானி அரசு இந்திய சமூகத்தை ஓரங்கட்டவில்லை: பிரதமர்
May 1, 2024, 10:59 pm
சமூக பயண அட்டையை தவறாக பயன்படுத்திய இந்திய நாட்டு கலைஞர் கைது
May 1, 2024, 6:46 pm
ராமசாமிக்கு இலக்கு இல்லை, பின்பற்றினால் காணாமல் போகலாம்: அந்தோனி லோக்
May 1, 2024, 6:38 pm
தனியார் துறையினரும் தங்கள் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும்: பிரதமர்
May 1, 2024, 6:34 pm
பத்துகேவ்ஸ் ஒய்டிஎல் ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தின் 4ஆவது பிரார்த்தனை விழா
May 1, 2024, 6:31 pm
தோட்டத்தில் தொழிலாளர்கள் கால்நடைகளை வளர்க்க தடை விதிக்க முடியாது: சிவநேசன்
May 1, 2024, 12:37 pm
அரசு ஊழியர்களின் சம்பளம் 13 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்த்தப்படும்: பிரதமர்
May 1, 2024, 12:35 pm