நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்ரேலிய ஆடவர் விவகாரம்: 10 பேர் சொஸ்மாவில் கைது

 

கோலாலம்பூர்:

இஸ்ரேலிய ஆடவர் விவகாரத்தில் 10 பேர் சொஸ்மா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.

இதனை கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ரூஸ்டி முஹம்மத் இசா கூறினார்.

கைத்துப்பாக்கி, தோட்டக்களுடன் இஸ்ரேலிய ஆடவர் ஷாலோம் அவிட்டன் கைது செய்யப்பட்டார்.

இவருடன் தொடர்பில் இருந்ததாக நம்பப்படும் 3 பெண்கள் உட்பட 10 பேர் சொஸ்மாவின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சட்டத்தின் கீழ் மேலும் விசாரணைக்காக முதலில் அவர்கள் காவலில் வைக்கப்பட்டனர்.

துப்பாக்கிச் சட்டத்தின்படி அவர்களின் தடுப்புக்காவல் கடந்த செவ்வாய்கிழமை முடிவடைந்தது.

ஆனால் அடுத்தக்கட்ட விசாரணைக்காக சொஸ்மாவின் படி இன்னும் 28 நாட்களுக்கு அவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset