நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நம்பிக்கை கூட்டணி வேட்பாளரை கோல குபு பாரு இந்திய வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டும்: உரிமை

கோலாலம்பூர்:

நம்பிக்கை கூட்டணி வேட்பாளரை கோல குபு பாரு இந்திய வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டும்.

இது தான் உரிமை கட்சியின் வலியுறுத்தலாகும் என்று அதன் தலைவர் பேராசிரியர் ராமசாமி கூறினார்.

கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் மே 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் நம்பிக்கை கூட்டணி வேட்பாளரை புறக்கணிக்க வேண்டும் என்று தான் உரிமை கட்சி வலியுறுத்தி வருகிறது.

இந்திய சமூகத்தை ஒற்றுமை அரசாங்கம் நடத்தும் விதத்தில் அதிருப்தி உள்ளது.

இதன் அடிப்படையில் தான் உரிமை கட்சி இதனை வலியுறுத்துகிறது.

ஆனால் வாக்களிப்பதை ஜனநாயக கடமையாகும். வாக்களிப்பதில் இருந்து தள்ளி நிற்க வேண்டும் என உரிமை கட்சி கூறவில்லை.

வாக்காளர்களின் ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று உரிமை நம்பவில்லை. 

ஆனால நம்பிக்கை கூட்டணி, ஜசெக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று வாக்காளர்களை, குறிப்பாக இந்தியர்களை உரிமை கட்சி கேட்டுக் கொள்கிறது என்று இராமசாமி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset