செய்திகள் மலேசியா
முடக்கப்பட்ட சம்பளத்தை போராடி பெற்றார் ரொனால்டோ
ரோம்:
ஜூவாந்தஸ் அணியுடனான முடக்கப்பட்ட சம்பளம் தொடர்பாக சட்டப்பூர்வ போராட்டத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ வெற்றி பெற்றுள்ளார்.
ஜூவாந்தஸ் அணி நிர்வாகம் போர்த்துக்கல் கால்பந்து நட்சத்திரமான ரொனால்டோ கொரோனா நாட்களின் போது சம்பள ஏற்பாடுகள் தொடர்பாக இத்தாலிய அணியான ஜூவாந்தஸ் உடன் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்.
நிதி நெருக்கடியால் அவதிப்பட்டு வந்த ஜூவாந்தஸ் அணி நிர்வாகம் ரொனால்டோ, பிற வீரர்களுடன் ஒப்பந்தம் செய்து, இதுவரை பெறாத ஊதியத்தை ஒத்திவைத்தனர்.
ஆனால் இந்த விவகாரத்தை இத்தாலிய கால்பந்து நிர்வாகத்திடம் தெரிவிக்காமல் விட்டுவிட்டனர்.
இந்த நிலையில் ஒரு நடுவர் மன்றம் தொடர்புடைய விவகாரத்தை கண்டுபிடித்ததை அடுத்து ரொனால்டோ சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க நேர்ந்தது.
இந்நிலையில் மொத்தம் 17 மில்லியன் பவுண்டுகள் ரொனால்டோ உட்பட பல வீரர்களுக்கு அளிக்கப்படாமல் முடக்கப்பட்டிருந்தது.
தற்போது சுமார் 8.3 மில்லியன் பவுண்டுகள் தொகை, வட்டியை ரொனால்டோ பெற்றுள்ளார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
பங்குச்சந்தையில் களமிறங்கிய ஜூவாந்தஸ் அணி 2022, 2023ல் சுமார் 100 மில்லியன் பவுண்டுகள் தொகையை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 11:34 pm
மடானி அரசு இந்திய சமூகத்தை ஓரங்கட்டவில்லை: பிரதமர்
May 1, 2024, 10:59 pm
சமூக பயண அட்டையை தவறாக பயன்படுத்திய இந்திய நாட்டு கலைஞர் கைது
May 1, 2024, 6:46 pm
ராமசாமிக்கு இலக்கு இல்லை, பின்பற்றினால் காணாமல் போகலாம்: அந்தோனி லோக்
May 1, 2024, 6:38 pm
தனியார் துறையினரும் தங்கள் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும்: பிரதமர்
May 1, 2024, 6:34 pm
பத்துகேவ்ஸ் ஒய்டிஎல் ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தின் 4ஆவது பிரார்த்தனை விழா
May 1, 2024, 6:31 pm
தோட்டத்தில் தொழிலாளர்கள் கால்நடைகளை வளர்க்க தடை விதிக்க முடியாது: சிவநேசன்
May 1, 2024, 12:37 pm
அரசு ஊழியர்களின் சம்பளம் 13 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்த்தப்படும்: பிரதமர்
May 1, 2024, 12:35 pm