நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஓரிரு ஆண்டுகளில் மலேசியாவின் முன்னேற்றம் கண்ட மாநிலமாக ஜொகூர் உருவெடுக்கும்: பிரதமர்

ஜொகூர்பாரு:

ஓரிரு ஆண்டுகளில் மலேசியாவின் மிகவும் முன்னேற்றம் கண்ட மாநிலமாக ஜொகூர் உருவெடுக்கும்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.

ஜொகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம், போரஸ் சிட்டி சிறப்பு நிதி மண்டலம் ஆகியவை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.

இந்த இரண்டு சிறப்புப் பொருளாதார, நிதி மண்டலங்களும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை  ஏற்படுத்தும்.

என்ன இலக்கு என்பது முக்கியம் அல்ல. ஆனால் இவ்விரு திட்டங்களால் நாட்டிற்கும் மாநிலத்திற்கும் என்ன பயன் என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.

குறிப்பாக ஓரிரு ஆண்டுகளில் மலேசியாவின் மிகவும் முன்னேற்றம் கண்ட மாநிலமாக ஜொகூர் உருவெடுக்கும்.

ஜொகூர்பாருவில் நடந்த மடானி நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வில் பேசிய பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset