நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விமான சேவை ரத்தானதால்  3 நண்பர்கள் வேலைக்காக ஜப்பான் திரும்ப முடியவில்லை

தாவாவ்:

விமான சேவை ரத்தால் 3 நண்பர்கள் வேலைக்காக ஜப்பான் திரும்ப முடியாமல் தத்தளித்து வருகின்றனர்.

இந்தோனேசியாவில் உள்ள ருவாங் எரிமலையின் வெடிப்பு காரணமாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

இதனால் தாவாவைச் சேர்ந்த மூன்று நண்பர்கள் ஜப்பான் ஒசாகாவிற்குச் செல்லும் விமானத்தைத் தவறவிட்டனர்.

குறிப்பாக இந்த மூன்று நண்பர்கள்  அதன் இழப்பைச் சுமக்க வேண்டியிருந்தது.

தாமும் மற்ற இரண்டு நண்பர்களும் நோன்பு பெருநாள் கொண்டாடிய பிறகு ஜப்பானுக்குத் திரும்ப வேண்டும்.

ஏற்கெனவே கோத்தா கினாபாலுவிலிருந்து ஓசாகாவிற்கு விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருப்பதாக அம்ரி வாய்யூடின் கூறினார்.

இன்று பிற்பகல் 1 மணிக்கு தாவாவ்  விமான நிலையத்திலிருந்து கோத்தா கினாபாலுவுக்கு விமானத்தில் ஏற வேண்டும்.

அதன் பின்  தென் கொரியாவுக்கு இன்று இரவு 10 மணிக்கு பயணத்தைத் தொடர வேண்டும். பின்னர் ஓசாகாவிற்கும் செல்ல வேண்டும்.

ஆனால் இன்று அப்பயணம் தடைப்போட்டு போனது என்று அவர் வேதனையுடன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset