நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூரில் பிரேக் பிடிக்காத பஸ் 11 வாகனங்களை மோதித் தள்ளியது

ஜொகூர்பாரு:

பிரேக் செயலிழந்ததால் கட்டுப்பாட்டை இழந்து பஸ்  11 வாகனங்களை மோதி தள்ளியது.

இப்பரபரப்பு சம்பவம் ஜொகூரில் உள்ள பத்துபகாட்டில் நிகழ்ந்தது.

சமிஞ்சை விளக்குக்காக வாகனங்கள் காத்துக் கொண்டிருந்த போது அப்பஸ் கட்டுப்பட்டை இழந்து வாகனங்களை மோதியது.

இந்த சம்பவத்தில் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை. சம்பந்தப்பட்ட பஸ் 9 கார்கள், 2 லோரிகள் மீது மோதியது.

விபத்தில் சிக்கிய அனைத்து வாகனங்களும் சேதமடைந்தன.

அதே வேளையில் வாகனத்தில் இருந்தவர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர் என்று பத்து பகாட் போலீஸ் தலைவர் இஸ்மாயில் டோலா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset