நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துப்பாக்கி சூடு விவகாரத்தில் கைதான ஹஃபிசுலுக்கு 7 நாள் தடுப்பு காவல்

கோத்தாபாரு:

சிப்பாங் அனைத்துலக விமான நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் சந்தேக நபரான ஹஃபிசுலுக்கு 7 நாள் தடுப்பு காவல் விதிக்கப்பட்டுள்ளது.

தடுப்பு காவல் பெறும் நோக்கில் ஹஃபிசுல் இன்று காலை கோத்தாபாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொணடு வரப்பட்டார்.

ஹஃபிசுல் ஹவாரி என்ற சந்தேக நபர் 36 மணி நேரத்துக்குப் பிறகு நேற்று மாலை 3 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் துப்பாக்கியுடன் விமான நிலையம் சென்ற ஹஃபிசுல் தன் மனைவியை நோக்கி சுட முயற்சித்தார்.

அப்போது குறி தப்பிய துப்பாக்கி குண்டு அங்கிருந்த மெய்க்காப்பாளரை தாக்கியது.

குண்டு தாக்கிய அந்த ஆடவர் தற்போது சைபர்ஜெயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் கைதான ஹஃபிசுல் விசாரணைக்கு உதவும் வகையில் 7 நாள் தடுப்பு காவல் உத்தரவை நீதிபதி ராய்ஸ் இம்ரான் ஹமித் வழங்கினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset