நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் பாதுகாப்பு, அமைதியைப் பேணுவதில் போலிசாரின் சேவைகள் போற்றுதலுக்குரியது: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் 

கோலாலம்பூர்:

நாட்டின் பாதுகாப்பு, அமைதியைப் பேணுவதில் தேசிய காவல்துறையின்  சேவைகள், பங்களிப்புகளுக்காக அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது பாராட்டுகள் என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கூறினார்.

போலிஸ்படையின் கௌரவத் தலைவராக இருக்கும் மாமன்னர்,

மக்களின் நல்வாழ்வைப் பாதுகாப்பதில் பங்களித்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளின் பங்களிப்புகளையும் சேவைகளையும் பாராட்டினார்.

அல்-ஃபாத்திஹா நம்மை விட்டு நிரந்தரமாக பிரிந்தவர்கள் தியாகிகள் பட்டியலில் முன்னிறுத்தப்பட வேண்டும்.

மேலும் அனைத்து போலிஸ்படை உறுப்பினர்களுக்கும் 217ஆவது போலீஸ் தின வாழ்த்துகள் என மாமன்னர் தமது அதிகாரப்பூர்வ முகநூலில் குறிப்பிட்டிருந்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset