நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

16ஆவது மாடியில் இருந்து விழுந்த 4 வயது சிறுவன் மரணம் சுங்கைபூலோவில் சம்பவம்

சுங்கைபூலோ:

அடுக்குமாடி குடியிருப்பின் 16ஆவது மாடியில் இருந்து விழுந்த 4 வயது சிறுவன் மரணமடைந்தான்.

இந்த சம்பவம் சுங்கைபூலோ மருத்துவமனைப் பணியாளர்கள் தங்கும் விடுதியில் நிகழ்ந்தது.

இச் சம்பவம் குறித்து சுங்கைபூலோ போலீஸ் தலைமையகத்திற்கு மாலை 4.28 மணிக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸ் அதிகாரிகள் மரணமடைந்த சிறுவனின் உடலை மீட்டனர்.

பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், 

முழு குடும்பமும் தூங்கிக் கொண்டிருந்ததது. அப்போது அச் சிறுவன் அறையில் உள்ள ஜன்னலில் ஏறியது எங்களுக்கு தெரியாது என்றும் கூறினர்.

மரணமடைந்தவரின் தாய் திடீரென தூக்கத்திலிருந்து எழுந்துள்ளார்.

குழந்தை அறை ஜன்னலின் வெளிப்புற விளிம்பில் இருப்பதைக் கண்டறிந்தார்.

மேலும் குழந்தை விழுவதற்கு முன்பு எங்கள் பிள்ளையைக் காப்பாற்ற முடியவில்லை என்று கூறினார்.

பாதிக்கப்பட்ட நான்கு வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அந்த இடத்தில் இருந்த மருத்துவ அதிகாரிகளும் உறுதிப்படுத்தினர்.

இதனை சுங்கைபூலோ போலீஸ் தலைவர் முஹம்மத் ஹஃபிஸ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset