செய்திகள் மலேசியா
16ஆவது மாடியில் இருந்து விழுந்த 4 வயது சிறுவன் மரணம் சுங்கைபூலோவில் சம்பவம்
சுங்கைபூலோ:
அடுக்குமாடி குடியிருப்பின் 16ஆவது மாடியில் இருந்து விழுந்த 4 வயது சிறுவன் மரணமடைந்தான்.
இந்த சம்பவம் சுங்கைபூலோ மருத்துவமனைப் பணியாளர்கள் தங்கும் விடுதியில் நிகழ்ந்தது.
இச் சம்பவம் குறித்து சுங்கைபூலோ போலீஸ் தலைமையகத்திற்கு மாலை 4.28 மணிக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸ் அதிகாரிகள் மரணமடைந்த சிறுவனின் உடலை மீட்டனர்.
பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில்,
முழு குடும்பமும் தூங்கிக் கொண்டிருந்ததது. அப்போது அச் சிறுவன் அறையில் உள்ள ஜன்னலில் ஏறியது எங்களுக்கு தெரியாது என்றும் கூறினர்.
மரணமடைந்தவரின் தாய் திடீரென தூக்கத்திலிருந்து எழுந்துள்ளார்.
குழந்தை அறை ஜன்னலின் வெளிப்புற விளிம்பில் இருப்பதைக் கண்டறிந்தார்.
மேலும் குழந்தை விழுவதற்கு முன்பு எங்கள் பிள்ளையைக் காப்பாற்ற முடியவில்லை என்று கூறினார்.
பாதிக்கப்பட்ட நான்கு வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அந்த இடத்தில் இருந்த மருத்துவ அதிகாரிகளும் உறுதிப்படுத்தினர்.
இதனை சுங்கைபூலோ போலீஸ் தலைவர் முஹம்மத் ஹஃபிஸ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 11:34 pm
மடானி அரசு இந்திய சமூகத்தை ஓரங்கட்டவில்லை: பிரதமர்
May 1, 2024, 10:59 pm
சமூக பயண அட்டையை தவறாக பயன்படுத்திய இந்திய நாட்டு கலைஞர் கைது
May 1, 2024, 6:46 pm
ராமசாமிக்கு இலக்கு இல்லை, பின்பற்றினால் காணாமல் போகலாம்: அந்தோனி லோக்
May 1, 2024, 6:38 pm
தனியார் துறையினரும் தங்கள் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும்: பிரதமர்
May 1, 2024, 6:34 pm
பத்துகேவ்ஸ் ஒய்டிஎல் ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தின் 4ஆவது பிரார்த்தனை விழா
May 1, 2024, 6:31 pm
தோட்டத்தில் தொழிலாளர்கள் கால்நடைகளை வளர்க்க தடை விதிக்க முடியாது: சிவநேசன்
May 1, 2024, 12:37 pm
அரசு ஊழியர்களின் சம்பளம் 13 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்த்தப்படும்: பிரதமர்
May 1, 2024, 12:35 pm