நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குளுவாங்கில் ரயில் மோதியதில் யானைக் குட்டி மரணம்

குளுவாங்:

கேடிஎம் ரயில் மோதியதில் 
யானைக் குட்டி மரணமடைந்தது.

இந்த சம்பவத்தில் ரயிலில் பயணித்த 70 பயணிகள் எந்தவொரு பாதிப்பும் இன்றி தப்பினர் என்று குளுவாங் போலீஸ் தலைவர் பஹ்ரின் முஹம்மத் நோ கூறினார்.

ஜேபி சென்ட்ரலில் இருந்து ஜெமாஸுக்குப் மொத்தம் 70 பயணிகளுடன் சென்ற ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற யானைக் குட்டியை மோதியது

இந்த சம்பவம் இரவு ரெங்கம் - மெங்கிபோல் இடையே கிலோ மீட்டர் 678.50 இல் நிகழ்ந்தது.

இரவு 8.19 மணிக்கு நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தில் பயணிகளுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை.

யானையை மோதியதால் ரயிலின் இயந்திர பகுதியில் சேதம் ஏற்பட்டது.

மேலும் ரயில்வே தண்டவாளத்தின் அருகே ஒரு யானை குட்டி தரையில் உயிரற்ற நிலையில் கிடந்தது.

இரண்டு யானைகள் தண்டவாளத்தைத் தாண்டி பிரதான சாலையைக் கடந்து, தண்டவாளத்தின் குறுக்கே உள்ள தோட்டத்தை நோக்கிச் சென்ற போது இந்த விபத்து நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset