நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நோன்பு திறக்கும் போது ஆரஞ்சு பழச்சாற்று குடித்ததால் விபரீதம்: கத்தி குத்துக்கு ஆடவர் பலி

ஷா ஆலம்:

நோன்பு திறக்கும் போது நண்பரின் ஆரஞ்சு பழச்சாற்று குடித்ததற்காக மூண்ட சண்டையில் ஆடவர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் ஷாஆலம் செக்சன் 36இல் உள்ள தொழிற்சாலையில் நடந்தது என்று ஷாஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் முஹம்மத்  இக்பால் இப்ராஹிம் கூறினார்.

51 வயதுடைய பாகிஸ்தான் ஆடவர் ஒருவர் நோன்பு துறக்கும் போது ஆரஞ்சு நீரை சக தொழிலாளர் பருகியதால் கோபமடைந்ததுள்ளார்.

இதனால் சமையலறையில் இருந்து எடுக்கப்பட்ட கத்தியால் பாதிக்கப்பட்டவரை பலமுறை அவர் குத்தியதால் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இச் சம்பவத்தில் 46 வயதுடைய வங்காளதேச ஆடவர் மரணமடைந்துள்ளார்.

சம்பவ இடத்தில் பாதிக்கப்பட்டவரை குத்துவதற்கு சந்தேகநபர் பயன்படுத்திய கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset