செய்திகள் மலேசியா
பெர்லிஸ், பொக்கோ செனாவில் வெப்ப அலை – வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை
கோலாலம்பூர்:
பெர்லிஸ், கெடா மாநிலத்தின் போக்கோ செனாவிலும் பதிவாகும் இரண்டாம் கட்ட வெப்பநிலை காரணமாக இன்று அப்பகுதிகளில் வெப்ப அலை ஏற்படும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட்மலேசியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஓரிடத்தில் தொடர்ச்சியாக மூன்று தினங்களுக்கு 37 முதல் 40 டிகிரி பாகை வரையிலான வெப்பம் ஏற்படும் போது வெப்ப அலை அல்லது இரண்டாம் கட்ட நிலை உண்டாகும் என்று மெட்மலேசியா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தீபகற்ப மலேசியா முழுவதுமுள்ள 26 இடங்களில் எச்சரிக்கை நிலை பதிவாகியுள்ளது.
கெடா மாநிலத்தின் லங்காவி, கோல மூடா,கூபாங் பாசு, பாடாங் தெராப், சிக், பாலிங் ஆகிய பகுதிகளிலும் பினாங்கின் தீமோர் லாவுட் மாவட்டமும் பேராக் மாநிலத்தில் கம்பார், கோல கங்சார், கிந்தா ஆகிய பகுதிகளும் இந்த சீதோஷ்ண நிலையை எதிர்கொண்டுள்ளன.
பகாங் மாநிலத்தின் பெந்தோங், ரவுப், தெமர்லோ மாவட்டங்களும் சிலாங்கூரில் கோல சிலாங்கூர் மற்றும் சிப்பாங்கும் முதல் கட்ட வெப்பநிலையை பதிவு செய்துள்ளன.
கூட்டரசுப் பிரதேசத்தின் புத்ராஜெயா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஜெலுபு, ரெம்பாங், தம்பின் மற்றும் சிரம்பான் ஆகிய பகுதிகளும் மலாக்காவின் அலோர் காஜா மற்றும் ஜோகூரின் பத்து பகாட், சிகாமாட் மற்றும் மூவார் ஆகிய பகுதிகளிலும் இந்நிலை நீடிக்கிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 11:34 pm
மடானி அரசு இந்திய சமூகத்தை ஓரங்கட்டவில்லை: பிரதமர்
May 1, 2024, 10:59 pm
சமூக பயண அட்டையை தவறாக பயன்படுத்திய இந்திய நாட்டு கலைஞர் கைது
May 1, 2024, 6:46 pm
ராமசாமிக்கு இலக்கு இல்லை, பின்பற்றினால் காணாமல் போகலாம்: அந்தோனி லோக்
May 1, 2024, 6:38 pm
தனியார் துறையினரும் தங்கள் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும்: பிரதமர்
May 1, 2024, 6:34 pm
பத்துகேவ்ஸ் ஒய்டிஎல் ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தின் 4ஆவது பிரார்த்தனை விழா
May 1, 2024, 6:31 pm
தோட்டத்தில் தொழிலாளர்கள் கால்நடைகளை வளர்க்க தடை விதிக்க முடியாது: சிவநேசன்
May 1, 2024, 12:37 pm
அரசு ஊழியர்களின் சம்பளம் 13 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்த்தப்படும்: பிரதமர்
May 1, 2024, 12:35 pm