நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தையின் உடலைப் படம் பிடித்து கணவருக்கு அனுப்பிய பெண் கைது 

ஜொகூர்பாரு:

ஒரு வயது ஆறு மாத ஆண் குழந்தையை கழுத்தை அறுத்துக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

ஜொகூர் போலீஸ்படைத் தலைவர்  எம். குமார் இதனை உறுதிப்படுத்தினார்.

பாசிர் கூடாங் அருகே குடியிருப்பு பகுதியில் நடந்த சம்பவம் குறித்து மதியம் 1.30 மணியளவில் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

முதற்கட்ட விசாரணையில், சந்தேக நபர் தனது மகனின் கழுத்தில் வடிந்த ரத்தத்தின் பதிவை வாட்ஸ்அப் செயலி மூலம் தனது கணவரின் கைப்பேசிக்கு அனுப்பியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் 32 வயதுடைய அப் பெண் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கத்தியையும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

சம்பவத்தின் நோக்கம், இறப்புக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது.

மரணமடைந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset