நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தம் மீதான குற்றச்சாட்டுகளின் செல்லுபடியை உயர்நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும்: துன் டாயிம் மனைவி

கோலாலம்பூர்:

நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றச்சாட்டுகளின் செல்லுபடியை உயர்நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும்.

துன் டாயிமின் மனைவி நைமா காலித் இதனை கோரியுள்ளார்.

கடந்த ஜனவரி 23ஆம் தேதி எம்ஏசிசியின் கீழ் சொத்து அறிவிப்பு நோட்டீஸின் விதிமுறைகளுக்கு இணங்கத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நைமா மீது வழக்குத் தொடரப்பட்டது.

எம்ஏசிசி சட்டம் 2009ன் பிரிவு 36(2)ன் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

நைமா தனது நிறுவனங்களின் உரிமையை அறிவிக்கத் தவறியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

இந்நிலையில் எம்ஏசிசி சட்டத்தின் பிரிவு 36(2) சுய குற்றச்சாட்டிற்கு எதிரான தனது உரிமையை மீறுகிறதா, எந்தவொரு நபருக்கு எதிரான நடவடிக்கைகளிலும் குற்றஞ்சாட்டக்கூடிய ஆதாரங்களைத் தயாரிக்க நிர்பந்திக்கப்படாமல் இருப்பதற்கான உரிமையை மீறுகிறதா என்பதைத் தீர்ப்பளிக்குமாறு நைமா கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset