நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளை முன்னெடுக்கும் தமிழ் ஊடகங்களின் பங்கு அளப்பறியது: ஸ்டீவன் சிம்

கோலாலம்பூர்:

இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளை முன்னெடுக்கும் தமிழ் ஊடகங்களின் பங்கு அளப்பறியது.

மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை தெரிவித்தார்.

நாட்டில் வாழும் இந்திய சமுதாயம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தமிழ் ஊடகங்கள் முன்னெடுத்து வருகிறது.

பல பிரச்சினைகள் இந்த ஊடகங்கள் வாயிலாக தான் அரசாங்கத்தை சென்றடைகிறது.

தமிழ் ஊடகங்களின் இந்த பணி தொடர வேண்டும்.

குறிப்பாக தமிழ் ஊடகங்களும் மனிதவள அமைச்சும் இணைந்து செயல்படும்.

அமைச்சின் செய்திகள் வராவிட்டாலும் இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளை இந்த ஊடகங்களின் வாயிலாக தெரிந்துக் கொள்ளலாம்.

மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் நேற்று தமிழ் ஊடகங்களின் பிரதிநிதிகளை சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset