நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாடாளுமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் புகார் செய்ய வான் சைபுலுக்கு ஒரு வாரம் கெடு: எம்ஏசிசி 

புத்ராஜெயா:

நாடாளுமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர்  வான் சைபுல் உடனடியாக புகார் செய்ய வேண்டும்.

அதற்கு ஒரு வாரம் கெடு வழங்கப்படுகிறது என்று எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கி கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வருக்கு ஆதரவு தெரிவித்தால் சில நபர்கள் எனக்கு சன்மானம் வழங்கியதாக வான் சைபுல் நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் உண்மை என்றால் வான் சைபுல் உடனடியாக எம்ஏசிசியில் புகார் செய்ய வேண்டும்.

இந்த விவகாரத்தில் எது உண்மை   என்பதை இப்போது என்னால் அறிவிக்க முடியாது.

காரணம் நாங்கள் இன்னும் அவரது அதிகாரப்பூர்வ புகாருக்காக காத்திருக்கிறோம்.

புகாரின் அடிப்படையில் எம்ஏசிசி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset