நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆம்புலன்ஸை பின் தொடர்ந்து சென்ற அமைச்சரின் கார்; விசாரணைக்கு ஒத்துழைக்க தயார்: ங்கா கோர் மிங்

கோலாலம்பூர்:

ஆம்புலன்ஸை பின் தொடர்ந்து சென்ற அமைச்சரின் கார் விவகாரத்தில் விசாரணைக்கு ஒத்துழைக்க தயார்.

வீடு, ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் கூறினார்.

வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் அமைச்சரின் கார் ஆம்புலன்ஸை பின் தொடர்ந்து சென்ற விவகாரம் சர்ச்சையாகி உள்ளது.

சம்பந்தப்பட்ட அமைச்சர் நான் தான். ஒரு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றபோது இந்த சம்பவத்தில் நடந்தது.

இந்த விவகாரத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளேன்.

எனது ஓட்டுநர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அபராதம் செலுத்த தயாராக இருக்கவும் எனது அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

இது வேண்டுமென்றே  நடந்த சம்பவம் அல்ல. அதற்காக வருந்துகிறேன் என்று ங்கா கோர் மிங் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset