செய்திகள் மலேசியா
நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு
பெட்டாலிங் ஜெயா:
சீனப் பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
இலவச டோல் சேவை இன்றும் தொடர்வதால் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சுங்கை பூலோவிலிருந்து தெற்கு ரவாங் வரையிலும், தெற்கு ரவாங் முதல் ரவாங் வரையிலும் வடக்கு நோக்கிய சாலையில் வாகனங்கள் மெதுவாகச் செல்வதாகவும், சிலிம் ரிவரிலிருந்து சுங்காய் வரை நெரிசல் இருப்பதாகவும் தேசிய நெடுஞ்சாலை நிறுவனம், பிளஸ் தெரிவித்துள்ளது.
கிலோமீட்டர் 25 இல் ஒரு விபத்தைத் தொடர்ந்து புத்ராஜெயாவிலிருந்து பண்டா கமுடா கோவ் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், கிளாங் பள்ளத்தாக்கிலிருந்து கிழக்குக் கடற்கரைக்கு போக்குவரத்து நெரிசல் இன்னும் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.
கென்திங் செம்ப்பாலிருந்து புக்கிட் திங்கிக்குச் செல்லும் கிலோமீட்டர் 42.5-இல் விபத்து ஏற்பட்டுள்ளதால் இடப்புறப் பாதை தடுக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இன்று மதியம் மற்றூம் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், நெடுஞ்சாலையில் பயணிப்பவர்கள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 11:34 pm
மடானி அரசு இந்திய சமூகத்தை ஓரங்கட்டவில்லை: பிரதமர்
May 1, 2024, 10:59 pm
சமூக பயண அட்டையை தவறாக பயன்படுத்திய இந்திய நாட்டு கலைஞர் கைது
May 1, 2024, 6:46 pm
ராமசாமிக்கு இலக்கு இல்லை, பின்பற்றினால் காணாமல் போகலாம்: அந்தோனி லோக்
May 1, 2024, 6:38 pm
தனியார் துறையினரும் தங்கள் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும்: பிரதமர்
May 1, 2024, 6:34 pm
பத்துகேவ்ஸ் ஒய்டிஎல் ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தின் 4ஆவது பிரார்த்தனை விழா
May 1, 2024, 6:31 pm
தோட்டத்தில் தொழிலாளர்கள் கால்நடைகளை வளர்க்க தடை விதிக்க முடியாது: சிவநேசன்
May 1, 2024, 12:37 pm
அரசு ஊழியர்களின் சம்பளம் 13 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்த்தப்படும்: பிரதமர்
May 1, 2024, 12:35 pm