நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆம்புலன்ஸை பின் தொடர்ந்து சென்ற காரில் அமைச்சர் இருந்தார்: பேரா மாநில காவல்துறைத் தலைவர்

ஈப்போ:

ஆம்புலன்ஸை பின் தொடர்ந்து சென்ற காரில் அமைச்சரும் இருந்தார் என்று பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோஶ்ரீ முஹம்மத் யுஸ்ரி ஹசான் கூறினார்.

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் அமைச்சரின் அதிகாரப்பூர்வ கார் ஒன்று ஆம்புலன்ஸை பின் தொடர்ந்து சென்றுள்ளது.

சம்பந்தப்பட்ட விவகாரம் சமூக வலைத் தளங்களில் வைரலாகி உள்ளது.

இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி நடந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் அமைச்சரின் ஓட்டுநராகப் பணிபுரியும் ஒருவரால் வாகனம் ஓட்டப்பட்டது.

அமைச்சரும் அந்த வாகனத்தில் இருந்தார் என்று தெரிய வந்துள்ளது.

அவர்கள் இங்குள்ள ஜாலான் சிலாங்கில் உள்ள ஒரு குடியிருப்பில் ஒரு நலத்திட்டத்தில் கலந்து கொள்ளச் சென்று கொண்டிருந்தனர்.

எனினும், போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் அமைச்சர் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை.

காரோட்டியிடம் வாக்குமூலத்தை போலிசார் எடுத்துக் கொண்டதாகவும், விசாரணைக்கு உதவ சாட்சிகளை அழைப்பதாகவும் யுஸ்ரி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset