செய்திகள் மலேசியா
ஆம்புலன்ஸை பின் தொடர்ந்து சென்ற காரில் அமைச்சர் இருந்தார்: பேரா மாநில காவல்துறைத் தலைவர்
ஈப்போ:
ஆம்புலன்ஸை பின் தொடர்ந்து சென்ற காரில் அமைச்சரும் இருந்தார் என்று பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோஶ்ரீ முஹம்மத் யுஸ்ரி ஹசான் கூறினார்.
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் அமைச்சரின் அதிகாரப்பூர்வ கார் ஒன்று ஆம்புலன்ஸை பின் தொடர்ந்து சென்றுள்ளது.
சம்பந்தப்பட்ட விவகாரம் சமூக வலைத் தளங்களில் வைரலாகி உள்ளது.
இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி நடந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் அமைச்சரின் ஓட்டுநராகப் பணிபுரியும் ஒருவரால் வாகனம் ஓட்டப்பட்டது.
அமைச்சரும் அந்த வாகனத்தில் இருந்தார் என்று தெரிய வந்துள்ளது.
அவர்கள் இங்குள்ள ஜாலான் சிலாங்கில் உள்ள ஒரு குடியிருப்பில் ஒரு நலத்திட்டத்தில் கலந்து கொள்ளச் சென்று கொண்டிருந்தனர்.
எனினும், போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் அமைச்சர் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை.
காரோட்டியிடம் வாக்குமூலத்தை போலிசார் எடுத்துக் கொண்டதாகவும், விசாரணைக்கு உதவ சாட்சிகளை அழைப்பதாகவும் யுஸ்ரி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 11:34 pm
மடானி அரசு இந்திய சமூகத்தை ஓரங்கட்டவில்லை: பிரதமர்
May 1, 2024, 10:59 pm
சமூக பயண அட்டையை தவறாக பயன்படுத்திய இந்திய நாட்டு கலைஞர் கைது
May 1, 2024, 6:46 pm
ராமசாமிக்கு இலக்கு இல்லை, பின்பற்றினால் காணாமல் போகலாம்: அந்தோனி லோக்
May 1, 2024, 6:38 pm
தனியார் துறையினரும் தங்கள் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும்: பிரதமர்
May 1, 2024, 6:34 pm
பத்துகேவ்ஸ் ஒய்டிஎல் ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தின் 4ஆவது பிரார்த்தனை விழா
May 1, 2024, 6:31 pm
தோட்டத்தில் தொழிலாளர்கள் கால்நடைகளை வளர்க்க தடை விதிக்க முடியாது: சிவநேசன்
May 1, 2024, 12:37 pm
அரசு ஊழியர்களின் சம்பளம் 13 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்த்தப்படும்: பிரதமர்
May 1, 2024, 12:35 pm