நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்சே தலைமையகத்திற்கு வெளியே போலீஸ் நிறுத்தப்படவில்லை: மாவட்ட காவல்துறைத் தலைவர்

பெட்டாலிங் ஜெயா:

பெர்சே தலைமையகத்திற்கு வெளியே 
போலீஸ் தொடர்ந்து நிறுத்தப்படவில்லை.

இதனை மாவட்ட போலீஸ் தலைவர் ஃபக்ரூடின் அப்துல் ஹமீத் உறுதிப்படுத்தினார்.

பெர்சே செய்தியாளர் சந்திப்பு பற்றி போலீசாருக்கு தெரியும். ஆனால் நிகழ்ச்சி முழுவதும் ஏற்பாட்டாளர்களுடன் நாங்கள் ஈடுபடவில்லை.

பாதுகாப்புப் பணி காரணமாக கொண்டே அவர்கள் அங்கு சென்றனர். 

குறிப்பாக சுற்றுப்புற மக்களை பாதுகாப்பை கருத்தில் கொண்டு வழக்கமான போலீஸ் கடமைகளை செய்ய அதிகாரிகள் அங்கு வந்தனர். அதன் பின் கலைந்து சென்று விட்டனர். 

ஆகவே போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து பெர்சே தலைமையகத்திற்கு வெளியே நிறுத்தப்படவில்லை.

ஆனால் அவர்கள் வழக்கமான ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset