நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தலை, கால்கள், கைகள் இல்லாமல் நிர்வாணமாகப் பெண்ணின் உடல்  கண்டுபிடிப்பு

அலோர் காஜா:

தலை, கால்கள் மற்றும் கைகள் இல்லாமல் நிர்வாணமாக ஒரு பெண்ணின் சடலம் கால்வாயில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

இந்தச் சம்பவம் புலாவ் செபாங் கம்போங் ரீமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் காவல்துறைக்கு இது குறித்து தகவல் கிடைத்ததாக அலோர் காஜா மாவட்ட காவல்துறைத் தலைவர், சுப்ரிதெண்டன் அர்ஷத் அபு கூறினார்.

மலாக்கா காவல் படைத் தலைமையகத்தின் தடயவியல் பிரிவு (ஐபிகே) மற்றும் அலோர் காஜா மருத்துவமனை ஆகியவற்றின் அதிகாரிகள் குழு ஆய்வு செய்ய அந்த இடத்திற்குச் சென்றதாக அவர் கூறினார்.

சம்பவ இடத்தில் நடந்த விசாரணையில், 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண் கை, கால்கள்  இல்லாமல் நிர்வாணமாகப் பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

பெண்ணின் தலை, இரண்டு கைகள் மற்றும் கால்கள் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இருப்பினும், காணாமல் போன உடல் பாகங்கள் அப்பகுதியில் கிடைக்கவில்லை என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவதற்காக பிரேத பரிசோதனைக்காக சடலம் அலோர் காஜா மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் பிரகாரம் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

எனவே நெருங்கிய குடும்ப உறுப்பினரையோ அல்லது தெரிந்த நபரையோ இழந்த அல்லது சம்பவம் பற்றிய தகவல் தெரிந்த எந்தத் தரப்பினரையும் அருகில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset