நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்சத்து கட்சியைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை ஆதரிக்கிறார்கள்

கோலாலம்பூர்:

பெர்சத்து கட்சியைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை ஆதரிக்கிறார்கள்.

இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என்று புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் அபு ஹுசைன் ஹபிஸ் கூறினார்.

ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் லங்கா துபாய் திட்டம் மேற்கொள்ளப்பட்டது நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் அரசாங்கத்தை மாற்றும் திட்டங்கள் பற்றிய வதந்திகள் இருந்த போதிலும், எட்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அன்வாருக்கு தங்கள் ஆதரவை விரைவில் அறிவிப்பார்கள்.

கடந்த ஆண்டு நவம்பரில் அன்வாருக்கு தனது ஆதரவை அறிவித்த சைட் அபு ஹுசைன் ஹபீஸ்,

இந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாரை ஆதரிப்பதாக அறிவிப்பதற்கு முன், அடுத்த மாதம் மக்களவைக் கூட்டத்தை மீண்டும் தொடங்கும் வரை காத்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset