செய்திகள் மலேசியா
சனுசி மாநில அரசை வழி நடத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்: ஃபாஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து
கோலாலம்பூர் :
அரசாங்கத்தைக் கவிழ்க்க முன்னெடுக்கப்பட்ட துபாய் நகர்வு திட்டத்தில் கவனம் செலுத்தாமல் சனுசி அவர் தலைமையிலான கெடா மாநில அரசை வழி நடத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று தகவல் தொடர்பு அமைச்சர், ஃபாஹ்மி ஃபட்சில் கேட்டுக் கொண்டுள்ளார்.
முஹம்மத் சனுசி தலைமையிலான கெடா மாநில அரசில் தற்போது பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. அவற்றுக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளை முதலில் சனுசி மேற்கொள்ள வேண்டும் என்று லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபாஹ்மி கூறினார்.
சனுசி துபாய் நகர்வு பற்றி பேசுவதற்கு முன், கெடாவில் உள்ள கார் பந்தயம் மைதானம் குறித்து அவரிடம் கேளுங்கள் என்றார் அவர்.
சனுசி தனது அணுகுமுறையை மாற்ற வேண்டும் என்று தாம் கருதுவதாகவும் அவர் கூறினார்.
கெரிஞ்சி மக்கள் வீடமைப்புத் திட்டத்தின் (PPR)மைதானத்தில் இன்று நடைபெற்ற மலிவான விற்பனைத் திட்டமான 'மக்களுக்கான சேவை' நிகழ்ச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த போது ஃபாஹ்மி இவ்வாறு தெரிவித்தார்.
இதற்கிடையில், ஃபாஹ்மி முஹம்மது சனுசி எதிர்கொள்ளும் பல சிக்கல்களை பட்டியலிட்டார்.
சனுசி கெடா மாநிலத்தின் மந்திரி பெசார். நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல.
அதனால், அவர் மாநில ரீதியிலான பணிகளில் கவனம் செலுத்துவதே சிறப்பு என்று ஃபாஹ்மி மேலும் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 11:34 pm
மடானி அரசு இந்திய சமூகத்தை ஓரங்கட்டவில்லை: பிரதமர்
May 1, 2024, 10:59 pm
சமூக பயண அட்டையை தவறாக பயன்படுத்திய இந்திய நாட்டு கலைஞர் கைது
May 1, 2024, 6:46 pm
ராமசாமிக்கு இலக்கு இல்லை, பின்பற்றினால் காணாமல் போகலாம்: அந்தோனி லோக்
May 1, 2024, 6:38 pm
தனியார் துறையினரும் தங்கள் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும்: பிரதமர்
May 1, 2024, 6:34 pm
பத்துகேவ்ஸ் ஒய்டிஎல் ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தின் 4ஆவது பிரார்த்தனை விழா
May 1, 2024, 6:31 pm
தோட்டத்தில் தொழிலாளர்கள் கால்நடைகளை வளர்க்க தடை விதிக்க முடியாது: சிவநேசன்
May 1, 2024, 12:37 pm
அரசு ஊழியர்களின் சம்பளம் 13 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்த்தப்படும்: பிரதமர்
May 1, 2024, 12:35 pm