செய்திகள் மலேசியா
மற்ற நடவடிக்கைகளைத் தவிர்த்து நாட்டை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்: சனுசிக்கு அந்தோனி அறிவுறுத்து
பெட்டாலிங் ஜெயா:
டிஏபி கட்சியின் பொதுச்செயலாளர் அந்தோனி லோக் துபாய் நகர்வு போன்ற அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான எந்தவொரு இயக்கமும் பொறுப்பற்றது என்றும் திட்டத்தில் ஈடுப்பட்டுள்ள நபர்கள் மக்களின் ஆணையைப் பெற்ற பிறகு தலைவர்களாக தங்கள் கடமைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
உண்மையில் எதிர்க்கட்சிக்கு வேறு எதுவும் இல்லை.
கெடா மாநில மந்திரி பெசார் முஹம்மத் சனுசி நாட்டை முன்னேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். அவருக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது
மந்திரி பெசாராகப் பணியாற்றுவதில் அவர் கவனம் செலுத்த வேண்டும்.
அதைவிடுத்து, 'சௌ கிட் நகர்வு','அலோர் ஸ்டார் நகர்வுகள்' போன்ற பொறுப்பற்ற நடவடிக்கைகளில் ஈடுப்படுவதை அவர் தவிர்க்க வேண்டும் என்றார் லோக்.
அரசாங்கத்தைக் கவிழ்க்க நினைக்கும் இந்த நகர்வு திட்டங்கள் குறித்து வெளிப்படையாகச் சொல்பவர்கள் பொறுப்பற்றவர்கள் என்றும் லோக் சாடியுள்ளார்.
ஓர் அமைச்சராக, அரசியல்வாதியாக, நமது பணியில் கவனம் செலுத்த வேண்டும்.
போக்குவரத்து அமைச்சரான தனக்கு, போக்குவரத்து அமைச்சகத்தின் டிஜிட்டல் மயமாக்கல் நகர்வுத் திட்டம் மட்டுமே இருப்பதாகவும் அவர் கூறினார்.
கெடா மாநில மந்திரி பெசார், சனுசி அரசியலமைப்பு அனுமதித்துள்ள செயல்முறைக்கு ஏற்ப அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்க்கட்சி திட்டம் இருப்பதை உறுதிப்படுத்தியதையடுத்து அந்தோனி லோக் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 11:34 pm
மடானி அரசு இந்திய சமூகத்தை ஓரங்கட்டவில்லை: பிரதமர்
May 1, 2024, 10:59 pm
சமூக பயண அட்டையை தவறாக பயன்படுத்திய இந்திய நாட்டு கலைஞர் கைது
May 1, 2024, 6:46 pm
ராமசாமிக்கு இலக்கு இல்லை, பின்பற்றினால் காணாமல் போகலாம்: அந்தோனி லோக்
May 1, 2024, 6:38 pm
தனியார் துறையினரும் தங்கள் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும்: பிரதமர்
May 1, 2024, 6:34 pm
பத்துகேவ்ஸ் ஒய்டிஎல் ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தின் 4ஆவது பிரார்த்தனை விழா
May 1, 2024, 6:31 pm
தோட்டத்தில் தொழிலாளர்கள் கால்நடைகளை வளர்க்க தடை விதிக்க முடியாது: சிவநேசன்
May 1, 2024, 12:37 pm
அரசு ஊழியர்களின் சம்பளம் 13 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்த்தப்படும்: பிரதமர்
May 1, 2024, 12:35 pm