நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெடாவில் தைப்பூசத்திற்கு  அரசு விடுமுறை; மலேசிய இந்திய மக்கள் கட்சி வலியுறுத்து

கோலாலம்பூர்: 

கெடாவில் தைப்பூசத்திற்கு அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என மலேசிய இந்திய மக்கள் கட்சி வலியுறுத்தி உள்ளது.

வரும் ஜனவரி 25ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச விழாவிற்கு கெடாவில் சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கெடா மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ முகமத் சனுசி இதனை அறிவித்தார்.

இந்நிலையில் இந்த சிறப்பு விடுமுறை அரசு விடுமுறையாக மாற்ற வேண்டும்.

அரசு விடுமுறையால் இதுபோன்ற  பண்டிகைகள் நெருங்கும் போதெல்லாம் அவ்வப்போது நடக்கும் விவாதத்தை அது தவிர்க்கும்.

இஸ்லாம் அல்லாத விவகாரங்களை திறமையாக நிர்வகிப்பதற்கான கெடா மாநில அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இந்ர அரசு விடுமுறை தெளிவுப்படுத்தும்.

ஆகவே கெடா மாநில அரசு இக்கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் எஸ். சுப்பிரமணியம் கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset