நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாடு தரவு தளத்திலிருந்து புறநகர் மக்கள் விடுப்படாமல் இருப்பதைக் கிராமத் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் : டத்தோஸ்ரீ முகமது உசிர் மஹிடின்

கோலாலம்பூர்: 

பாடு எனப்படும் முதன்மை தரவு தளத்தில் 29 மில்லியன் மலேசியர்களைப் பதிவு செய்யும் இலக்கை அடைவதில் புறநகர்களிலுள்ள கிராமத் தலைவர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர்.

இந்தத் தளத்திலிருந்து யாரும் விடுப்படாமலிருக்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய மாநில அரசுகளுடன் அமர்வுகளும் நடத்தப்படுகின்றன என்று தலைமை புள்ளியியல் நிபுணர் டத்தோஸ்ரீ முஹம்மத் உசிர் மஹிடின் கூறினார். 

இதுவரை, கிராமப்புறங்களில் இந்தத் தளத்தில் பதிவு செய்வது குறித்து மாநில புள்ளியியல் துறைகள் மற்றும் கள ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் நேர்மறையானவை என்றும் அவர் கூறினார். 

புதன்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி,396,181 பேர் பாடு தளத்தில் பதிவு செய்துள்ளனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset