நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கரடி தாக்கியதில் தீயணைப்புப் படை வீரர்  காயம்

அலோர்ஸ்டார்:

கரடி தாக்கியதில் தீயனைப்புப்படை வீரர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று காலையில் கெடா யானில் உள்ள கம்போங் செலோங்கோவில் நிகழ்ந்தது.

வழிதவறி வந்த கரடி ஒன்று வயலுக்குள் நுழைந்து விட்டதாக தகவல் கிடைத்தது. 

இந்த தகவலை தொடர்ந்து யான் தீயணைப்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அக்கரடியை பிடிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டிருந்த போது முஹம்மத் நிஷாம் எனும் வீரர் கரடியால் தாக்கப்பட்டு காயங்களுக்கு இலக்கானார்.

அவர் உடனே அருகில் உள்ள மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார் என்று யான் தீயனைப்புப் படையின் தலைவர் நோர்ஹமிடி அலி கூறினார்.

இதனிடையே சம்பந்தப்பட்ட கரடி பின் அதிகாரிகளால் பிடிப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset