நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1.6 மில்லியன் வெள்ளி லஞ்சம் வாங்கிய வழக்கறிஞர் கைது 

கோலாலம்பூர்

1.6 மில்லியன் வெள்ளி லஞ்சம் பெற்ற விசாரணைக்கு உதவ வழக்கறிஞரைக் கைது செய்ததை பேராக் எம்ஏசிசி இயக்குநர் அஹம்மத் சப்ரி முஹம்மத் உறுதிப்படுத்தினார்.

இன்று காலை 11 மணியளவில் பேராக், ஜாலான் கோல கங்சாரிலுள்ள உணவகம் ஒன்றில் 30 வயது மதிக்கத்தக்க அந்தச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

ஒரு தொழிலதிபரிடமிருந்து 100,000 வெள்ளி ரொக்கம் மற்றும் 1.5 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள இரண்டு காசோலைகளைப் பெற்றது தொடர்பாக அந்த நபர் கைது செய்யப்பட்டது தெரியவந்தது. 

அவர் சம்பந்தப்பட்ட முதலீட்டு மோசடி வழக்கை மறைக்க லஞ்சம் வாங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சந்தேக நபர் நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset