நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆதரித்த 7 பெர்சத்து உறுப்பினர்களுக்கு அடுத்த வாரம் கடிதம் அனுப்பப்படும்: ஹம்சா

கோலாலம்பூர்:

பிரதமர், மந்திரி புசாரை ஆதரித்த 7 பெர்சத்து உறுப்பினர்களுக்கு அடுத்த வாரம் கடிதம் அனுப்பப்படும்.

அவர்களுக்கு ஒரே நேரத்தில் அக் கடிதங்கள் அனுப்பப்படும் என்று அக் கட்சியின் தலைமை செயலாளர் டத்தோஶ்ரீ ஹம்சா ஜைனுடின் கூறினார்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாரை 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிரூடினை 1 சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரித்தனர்.

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நோக்கில் கட்சியின் சட்டவிதிகள் திருத்தப்பட்டது.

இந்த சட்டத் திருத்தத்தை ஆர்ஓஎஸ்சும் ஏற்றுக் கொண்டது.

ஆகவே அவர்கள் மீதான நடவடிக்கை எடுப்பது குறித்து அடுத்த வாரம் கடிதம் அனுப்பப்படும்.

கோல குபு பாரு  சட்டமன்றத்தின் இடைத்தேர்தல் முடிந்தவுடன், சம்பந்தப்பட்ட அவர்களுக்கு ஒரே நேரத்தில் கடிதம் அனுப்பப்படும் என்று ஹம்சா கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset