செய்திகள் மலேசியா
தேசிய கூட்டணி வேட்பாளர் நம்பிக்கை கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளை காப்பியடித்துள்ளார்: புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி குற்றச்சாட்டு
ஷா ஆலாம்:
தேசிய கூட்டணியின் வேட்பாளர் கைருல் அஹ்ஸாரி சவுத் நம்பிக்கை கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளைக் காப்பியடித்துள்ளார் என்று புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி குற்றஞ்சாட்டினார்.
தேசிய கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள் ஒரு சேர நம்பிக்கை கூட்டணி வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளாக உள்ளன என்று அவர் கூறினார்.
தேசிய கூட்டணி வேட்பாளர் சுயமாக ஒரு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழலில் இருக்கிறார். இதுவே தேசிய கூட்டணியின் நிலையாகும் என்று நம்பிக்கை கூட்டணி சார்பாக போட்டியிடும் PANG SOCK TAO விற்குத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மே 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. PANG SOCK TAO, KHAIRUL ANUAR போட்டியிடும் நிலையில் PRM கட்சி சார்பாக ஹபிசா சைனுடின், சுயேட்சை வேட்பாளராக NYAU KE XIN போட்டியிடுகிறார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2024, 9:48 pm
ஆலய நிர்வாகத்தால் கோரப்பட்ட நிலம் இடமாற்றத்திற்கு தகுதியற்றது: ஆட்சிக் குழு உறுப்பினர்
May 19, 2024, 9:45 pm
தெரேசா கோக்கிற்கு கொலை மிரட்டல் கண்டனத்திற்குரியது: ஃபஹ்மி
May 19, 2024, 7:23 pm
துப்பாக்கி தோட்டாவுடன் திரேசா கோக்கிற்கு கொலை மிரட்டல்
May 19, 2024, 5:53 pm