
செய்திகள் மலேசியா
பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 கார்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமாகின
கோலாலம்பூர்:
பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 கார்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமாகின.
இந்த சம்பவம் புக்கிட் ஜாலில் பண்டார் பூச்சோங் ஜெயாவில் நிகழ்ந்தது.
இன்று காலை 10.56 மணியளவில் தீ விபத்து தொடர்பாக தீயணைப்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்தது.
பூச்சோங், சுபாங் ஜெயா, ஸ்ரீ கெம்பாங்கன், டாமன்சாரா தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த மொத்தம் 21 அதிகாரிகள், பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
காலை 11.04 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்தவுடன், தீயை அணைக்கும் நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன.
மேலும் தீ விபத்து கார், மோட்டார் சைக்கிள் பட்டறையாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு கட்டிடத்தில் ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் பட்டறை கட்டமைப்பு சுமார் 70% சேதமடைந்ததாகவும், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் சிலாங்கூர் தீயணைப்புத் துறையின் உதவி செயல்பாட்டு இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மொக்தார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 10, 2025, 12:59 pm
உப்சி மாணவர்கள் விபத்து; ஓட்டுநருக்கு 18 சம்மன்களும் பேருந்துக்கு 21 சம்மன்களும் ப...
June 10, 2025, 12:58 pm
பள்ளி பேருந்து உட்பட கனரக வாகனங்களுக்கு வேகக் கட்டுபாடு கட்டாயமாக்கப்பட வேண்டும்: ...
June 10, 2025, 12:57 pm
டிரெய்லர் லோரியின் பின்புறம் விரைவுப் பேருந்து மோதியது: 13 பல்கலைக்கழக மாணவர்கள் ...
June 10, 2025, 12:47 pm
தாய்மார்களின் அர்ப்பணிப்பை என்றும் நினைவில் கொண்டிருப்போம்: முனைவர் சத்தியவதி
June 10, 2025, 11:56 am
விசாரணை நிறைவடையும் வரை விபத்திற்கான காரணத்தை முடிவு செய்ய முடியாது: அயூப் கான்
June 10, 2025, 11:44 am
பெர்டானா புத்ராவில் போலந்து அதிபருக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது
June 10, 2025, 11:36 am
மோசமான பேருந்து விபத்தில் 15 உப்சி பல்கலைக்கழக மாணவர்கள் மரணம்: திரெங்கானு ஆட்சியா...
June 10, 2025, 11:34 am
பேருந்து உதவி ஓட்டுநர் விபத்தில் மரணமடையவில்லை: அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கி...
June 10, 2025, 11:32 am
தான்ஶ்ரீ வெ.மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு திட்டம் 2025: நாவல்களை மலேசியத் தமிழ் எழ...
June 10, 2025, 10:58 am