நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 கார்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமாகின

கோலாலம்பூர்:

பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 கார்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமாகின.

இந்த சம்பவம் புக்கிட் ஜாலில் பண்டார் பூச்சோங் ஜெயாவில் நிகழ்ந்தது.

இன்று காலை 10.56 மணியளவில் தீ விபத்து தொடர்பாக தீயணைப்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்தது.

பூச்சோங், சுபாங் ஜெயா, ஸ்ரீ கெம்பாங்கன், டாமன்சாரா தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த மொத்தம் 21 அதிகாரிகள்,  பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

காலை 11.04 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்தவுடன், தீயை அணைக்கும் நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன.

மேலும் தீ விபத்து கார், மோட்டார் சைக்கிள் பட்டறையாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு கட்டிடத்தில் ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் பட்டறை கட்டமைப்பு சுமார் 70% சேதமடைந்ததாகவும், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் சிலாங்கூர் தீயணைப்புத் துறையின் உதவி செயல்பாட்டு இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மொக்தார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset