
செய்திகள் மலேசியா
பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 கார்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமாகின
கோலாலம்பூர்:
பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 கார்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமாகின.
இந்த சம்பவம் புக்கிட் ஜாலில் பண்டார் பூச்சோங் ஜெயாவில் நிகழ்ந்தது.
இன்று காலை 10.56 மணியளவில் தீ விபத்து தொடர்பாக தீயணைப்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்தது.
பூச்சோங், சுபாங் ஜெயா, ஸ்ரீ கெம்பாங்கன், டாமன்சாரா தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த மொத்தம் 21 அதிகாரிகள், பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
காலை 11.04 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்தவுடன், தீயை அணைக்கும் நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன.
மேலும் தீ விபத்து கார், மோட்டார் சைக்கிள் பட்டறையாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு கட்டிடத்தில் ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் பட்டறை கட்டமைப்பு சுமார் 70% சேதமடைந்ததாகவும், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் சிலாங்கூர் தீயணைப்புத் துறையின் உதவி செயல்பாட்டு இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மொக்தார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 31, 2025, 9:56 am
தெங்கு ஸப்ருல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: டாக்டர் அக்மல்
May 31, 2025, 8:59 am
சைபர் பாதுகாப்பு திறன் பயிற்சித் திட்டம்; வேலை வாய்ப்புடன் இந்திய இளைஞர்களுக்கு வழ...
May 30, 2025, 9:36 pm
அம்னோவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுகிறேன்; விரைவில் கெஅடிலானில் இணைவேன்:...
May 30, 2025, 9:34 pm
வெப்பமான வானிலை செப்டம்பர் மாதம் வரை தொடரும்: மெட் மலேசியா
May 30, 2025, 9:33 pm
தியாகப் பெருநாளை முன்னிட்டு 2 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் பய...
May 30, 2025, 8:18 pm
புகையிலை ஒரு மெளன கொலையாளி; மே 31 உலக புகையிலை எதிர்ப்பு தினத்தில் புகைப்பதை நிறுத...
May 30, 2025, 5:35 pm
10 ரிங்கிட்டுக்கு நாசி கண்டார்; அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்க்க நல்ல முயற்சி: டத்த...
May 30, 2025, 5:32 pm
சமூகத்தை மாற்ற நிறைய வழிகள் உள்ளன: ரபிஸி ரம்லி
May 30, 2025, 5:30 pm
சபா ஊழல் விசாரணைகளில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்: பிரதமர்
May 30, 2025, 4:36 pm