நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதியை ஒற்றுமை அரசாங்கம் தற்காக்கும்: டத்தோஶ்ரீ அமிரூடின் ஷாரி நம்பிக்கை 

கோலாலம்பூர்: 

கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதியை ஒற்றுமை அரசாங்கம் தற்காக்கும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிரூடின் ஷாரி நம்பிக்கை தெரிவித்தார். 

நம்பிக்கை கூட்டணி வேட்பாளரான PANG SOCK TAO விற்கு வாக்காளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் கோலகுபு பாரு வாக்காளர்கள் நம்பிக்கை கூட்டணியை ஆதரிப்பார்கள் என்று அவர் கூறினார். 

இந்த முறை நடைபெறும் கே.கே.பி இடைத்தேர்தலில் சட்டமன்ற தொகுதியைத் தற்காப்போம். வாக்காளர்கள் அனைவரும் காலையிலேயே விரைந்து தங்களின் ஜனநாயக கடமையை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். 

கோலகுபு பாருவில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. நம்பிக்கை கூட்டணி வேட்பாளராக PANG SOCK TAO, தேசிய கூட்டணி சார்பாக KHAIRUL ANUAR SAUD, PRM கட்சி சார்பாக HAFIZAH ZAINUDDIN மற்றும் சுயேட்சை வேட்பாளராக NYAU KE XIN ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset