செய்திகள் மலேசியா
இந்திய சமூகம் வாக்களிக்கும் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்: டத்தோ ரமணன்
பத்தாங்காலி:
இந்திய சமூகம் தங்களின் வாக்களிக்கும் ஜனஎநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்.தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ஆர். ரமணன் இதனை கூறினார்.
கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்காளிப்பு நாளை நடைபெறவுள்ளது.ஆகையால் இந்த தொகுதியில் உள்ள அனைத்து இந்திய வாக்காளர்களும் நாளை வெளியே வந்து வாக்களிக்க வேண்டும்.
வாக்களிப்பது நமது ஜனநாயக கடமையாகும். இதை யாருக்காகவும் நாம் விட்டுக் கொடுக்கக் கூடாது.
தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று ஒரு சிலர் கூறுகின்றனர்.
தேர்தலைப் புறக்கணிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேன்டும்.குறிப்பாக நமக்கு உதவும் பிரதிநிதி இல்லாதது இங்குள்ள மக்களுக்கு தான் பாதிப்பு.
ஆகவே நாளைய தேர்தலில் இந்திய சமூகம் எதிர்காலத்தை சிந்தித்து நம்பிக்கை கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.பத்தாங்காலியில் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பில் டத்தோ ரமணன் இவ்வாறு கூறினார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 20, 2024, 5:42 pm
சிலாங்கூர் போலீஸ் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு: ஹுசைன் ஓமார் கான்
May 20, 2024, 5:40 pm
ஏப்ரல் மாதத்தில் விமானச் சேவைகளின் பயன்பாடு 19.5% அதிகரித்துள்ளது
May 20, 2024, 5:26 pm
அயன் திரைப்பட பாணியில் வயிற்றில் போதைப் பொருள் கடத்திய லத்தின் அமெரிக்க ஆடவர் கைது
May 20, 2024, 5:19 pm
சுங்கை சிப்புட் தொகுதி தேர்தலில் சின்னராஜூ அமோக வெற்றி
May 20, 2024, 5:05 pm
பேராக் மாநில இந்தியப்பள்ளி கூட்டுறவுக் கழகம் 60 ம் ஆண்டு கூட்டம்
May 20, 2024, 3:27 pm