நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய வாக்காளர்கள் எதிர்க்கட்சியினரின் சதி வலையில் விழ மாட்டார்கள்: சைஃபுடின் நசுத்தியோன்

கோல குபு பாரு:

கோலா குபு பாருவில் நடைபெறும் இடைத்தேர்தலில் பிஆர்கே வேட்பாளர் பாங் சாக் தாவோவுக்கு இந்திய வாக்காளர்கள் முழு ஆதரவை வழங்குவார்கள் என்று பிகேஆர் கட்சியின் பொதுச் செயலாளர் சைஃபுடின் நசுத்தியோன் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த இடைத்தேர்தலில் இந்திய சமூகத்தினர் வாக்களிக்க வேண்டாம் என்று சில எதிர்க்கட்சியினர் தங்கள் கருத்துகளை முன் வைத்தாலும், இந்திய வாக்காளர்கள் எளிதில் எதிர்க்கட்சியினரின் சதி வலையில் விழ மாட்டார்கள் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

கோல குபு பாருவில் மக்களுக்காகச் சேவை செய்யும் ஒரு தலைவரை இந்திய வாக்காளர்கள் புத்திசாலித்தனமாகச் செயல்படுவார்கள் என்றார் அவர். 

முன்னதாக, பல கட்சிகள் இந்திய வாக்காளர்களை இடைத்தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்றும் நம்பிக்கை கூட்டணி வேட்பாளருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டது மத்திய அரசின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தியது.

மாநில மற்றும் மத்திய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நம்பிக்கை கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது கோல குபு பாருவில் அதிக வளர்ச்சியை ஏற்படுத்தும் என்று சைஃபுடின் கூறினார்.

இங்கு நம்பிக்கை கூட்டணி வெற்றி பெற்றால் இந்திய  சமூகத்தின் அனைத்து பிரச்சனைகளையும் திறம்பட தீர்க்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

வேறொரு கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளரை தேர்ந்தெடுத்து வெற்றி பெற்றால், சமூகத்தின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்பட விரும்புவது மிகவும் கடினம் என்றார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset