செய்திகள் மலேசியா
கேகேபி இடைத்தேர்தலின் பாதுகாப்பை தேசிய காவல்படை உறுதி செய்யும்: உள்துறை அமைச்சர்
உலு சிலாங்கூர்:
கோல குபு பாரு இடைத்தேர்தலின் வாக்கு பதிவு நாள் வரை அங்கு பொது பாதுகாப்பை தேசிய காவல்படை உறுதி செய்யும் என்று உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே தேசிய காவல்படை தலைவர், டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன் தாம் கலந்துரையாடி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கேகேபி-யில் தற்போது காவல்துறை ஏற்கனவே நியாயமான மற்றும் போதுமானதாகக் கருதப்படும் படைகளை நிலைநிறுத்தியுள்ளது.
தற்போது பிரச்சாரம் இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அங்குப் புகார்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த முறை இடைத்தேர்தல் காலம் முழுவதும் பொதுமக்களுக்கு தனது தரப்பு பாதுகாப்பு உறுதிமொழியை வழங்கியதாக சைபுதீன் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஏப்ரல் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் பிரச்சாரம் தொடங்கியதிலிருந்து இதுவரை காவல்துறைக்கு ஆபத்தானதாகக் கருதப்படும் எந்த அறிக்கையும் வரவில்லை என்றார் அவர்.
இது தொடர் கண்காணிப்பின் விளைவு. இந்த காவல் துறையின் அர்ப்பணிப்பு வாக்குப்பதிவு நாள் வரை நான்கு நாட்களும் தொடரும் என்றார் அவர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 20, 2024, 3:27 pm
சிங்கப்பூரில் அதிகரித்து வரும் கோவிட்-19 பாதிப்பு: மீண்டும் பொதுமுடக்கம்?
May 20, 2024, 3:26 pm
ஜொகூர் போலீஸ் நிலையத் தாக்குதல் யூகங்களைப் பரப்பாதீர்: அஹ்மத் மஸ்லான்
May 20, 2024, 3:25 pm
விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர்; உடனடியாக புதிய அதிபர் தேர்வு
May 20, 2024, 1:19 pm
பெட்ரோல் நிலையத்தில் மேகி நூடல்ஸ் சமைத்த 15 பேர் கைது
May 20, 2024, 12:45 pm
கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள தெரேசா கோக்கிற்கு பாஸ் கட்சி துணை நிற்கும்: தகியூடின்
May 20, 2024, 12:43 pm
கூலிம் இந்து ஆலயம் இடமாற்றத்திற்கு சுமூகமான முறையில் தீர்வு காண வேண்டும்: இராமசாமி
May 20, 2024, 12:10 pm
ரயில் உள்ளே கேளிக்கை ஆட்டம் பாட்டம்: KTMB யின் பெயருக்குக் களங்கம்: பாஸ் கண்டனம்
May 20, 2024, 11:53 am