செய்திகள் மலேசியா
கால்பந்து வீரர்களின் உயிரும் பாதுகாப்பும் தான் மிக முக்கியம்: சிலாங்கூர் சுல்தான்
ஷா ஆலம்:
நாளை நடைபெறவிருக்கும் 2024-ஆம் ஆண்டுக்கான சும்பங்சிஹ் கிண்ணப் போட்டியில் ஜேடிதி-க்கு எதிரான ஆட்டத்தில் கலந்து கொள்ளாத சிலாங்கூர் எஃப்சி அணியின் முடிவை முழுமையாக ஆதரிப்பதாக சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷரஃபுடின் தெரிவித்தார்.
சிலாங்கூர் எஃப்சியின் ஆலோசகர் என்ற முறையில், சமீபத்தில் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பல உயிருக்கு ஆபத்தான சம்பவங்களைத் தொடர்ந்து, சிலாங்கூர் எஃப்சி அணி போட்டியில் பங்கேற்காதது பொருத்தமானது என்று தாம் கருதுவதாக அவர் கூறினார்.
இந்த நேரத்தில் கால்பந்து வீரர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதே முக்கியம். தற்போது கிண்ணத்தை வெல்வதற்கு அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
ஃபைசால் ஹலீம் சம்பந்தப்பட்ட அமிலம் வீச்சு சம்பவத்தால் இன்னும் கலக்கமடைந்து பாதிக்கப்பட்ட அணியின் மன உறுதியும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்” என்று இன்றைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், சிலாங்கூர் எஃப்சியின் போட்டியை ஒத்திவைக்கும் கோரிக்கையை மலேசிய கால்பந்து லீக் நிராகரித்ததற்கு மாட்சிமையும் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 20, 2024, 3:27 pm
சிங்கப்பூரில் அதிகரித்து வரும் கோவிட்-19 பாதிப்பு: மீண்டும் பொதுமுடக்கம்?
May 20, 2024, 3:26 pm
ஜொகூர் போலீஸ் நிலையத் தாக்குதல் யூகங்களைப் பரப்பாதீர்: அஹ்மத் மஸ்லான்
May 20, 2024, 3:25 pm
விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர்; உடனடியாக புதிய அதிபர் தேர்வு
May 20, 2024, 1:19 pm
பெட்ரோல் நிலையத்தில் மேகி நூடல்ஸ் சமைத்த 15 பேர் கைது
May 20, 2024, 12:45 pm
கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள தெரேசா கோக்கிற்கு பாஸ் கட்சி துணை நிற்கும்: தகியூடின்
May 20, 2024, 12:43 pm
கூலிம் இந்து ஆலயம் இடமாற்றத்திற்கு சுமூகமான முறையில் தீர்வு காண வேண்டும்: இராமசாமி
May 20, 2024, 12:10 pm
ரயில் உள்ளே கேளிக்கை ஆட்டம் பாட்டம்: KTMB யின் பெயருக்குக் களங்கம்: பாஸ் கண்டனம்
May 20, 2024, 11:53 am