செய்திகள் மலேசியா
இது மசீசவின் மானப் பிரச்சினை; தேர்தல் பிரச்சாரத்திற்கு உதவ மாட்டோம்: வீ கா சியோங்
கோலாலம்பூர்:
இது மசீசவின் மானப் பிரச்சினை என்பதால் கோல குபு பாரு தேர்தல் பிரச்சாரத்திற்கு உதவ மாட்டோம்.
அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ வீ கா சியோங் இதனை தெரிவித்தார்.
கடந்தாண்டு பெலாங்காய் இடைத் தேர்தலில் அம்னோ வெற்றி பெற்ற நம்பிக்கை கூட்டணி உதவியது.
அதே போன்று இம்முறை ஜசெக வெற்றி பெற தேசிய முன்னணி உதவ வேண்டும் என்று ஜசெகவின் ங்கா கோர் மிங் கூறினார்.
மேலும் ஜசெக பொதுச் செயலாளர் அந்தோனி லோக் ஒரு நிகழ்ச்சியில் மசீச தவ்கே. அது சீன சமூகத்தின் நலன்களைப் பற்றி கவலைப்படவில்லை என்றும் சாடினார்.
ஜசெக தலைவர்களின் இதுபோன்ற கருத்துகள் மசீச உறுப்பினர்களை காயப்படுத்தியுள்ளது.
இது மசீசவிற்கு ஏற்பட்டுள்ள மானப் பிரச்சினையாகும்.
ஆகவே வரும் கோல குபு பாரு இடைத் தேர்தலை மசீச புறக்கணிக்கும்.
இந்த முடிவில் மசீச உறுதியாக உள்ளது என்று டத்தோஶ்ரீ வீ கா சியோங் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm