செய்திகள் மலேசியா
வாக்களிப்பது நமது உரிமை; யாருக்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது: கணபதி ராவ்
கோல குபு பாரு:
வாக்களிப்பது நமது உரிமை. யாருக்காகவும் அதை விட்டுக் கொடுக்கக் கூடாது.
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ் இதனை தெரிவித்தார்.
கோல குபு பாரு பெர்தாக் ஸ்ரீ முனீஸ்வரர் வீரபத்திர காளியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி பூஜை சிறப்பாக நடைபெற்றது.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதி ராவ் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய கணபதிராவ், வரும் கோல குபு பாரு இடைத் தேர்தலில் அனைத்து இந்திய மக்களும் வாக்களிக்க வேண்டும்.
வாக்களிப்பது நமது உரிமை. அதை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது.
அதே வேளையில் மத்திய, மாநில அரசாங்கத்தின் மீது குறைபாடுகள் இருந்தால் உள்ளே இருந்து தான் அது குறித்து கேள்வி எழுப்ப வேண்டும்.
அதை விடுத்து வெளியே இருந்து கத்தினால் எந்த பயனும் இருக்காது.
என்னை பொருத்த வரையில் பதவி இருக்கிறதோ இல்லையோ இந்திய சமுதாயத்தின் பிரச்சினைக்கு குரல் கொடுப்பேன்.
சமுதாய பிரச்சினையில் இருந்து ஒரு போதும் பின் வாங்க மாட்டேன் என்று கணபதி ராவ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm