நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சக ஆசிரியையை ஆசிரியர் தாக்கிய சம்பவம் தொடர்பான விசாரணையைக் கல்வி அமைச்சு காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளது: கல்வியமைச்சர்

கோலாலம்பூர்: 

கடந்த ஞாயிற்றுக்கிழமை திரெங்கானுவிலுள்ள கெமாமான் மாவட்டத்திலுள்ள தொடக்கப் பள்ளியில் தனது சக ஆசிரியையைத் தாக்கியதாக நம்பப்படும் ஆண் ஆசிரியர் வழக்கை விசாரிக்க மலேசிய கல்வி அமைச்சகம் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளது. 

இந்த வழக்கு தொடர்பாக தனது அமைச்சகம் காவல்துறைக்கு ஒத்துழைக்கும் என்று கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார். 

இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

காவல்துறையின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கல்வியமைச்சு இணங்கும் என்று விசாரணையின் முன்னேற்றம் குறித்துக் கருத்து கேட்டபோது அவர் கூறினார்.

முன்னதாக, 49 வயதான ஆண் ஆசிரியர் நேற்று இரவு 9.30 மணியளவில் ஆசிரியர் குடியிருப்பில் கைது செய்யப்பட்டதாகத் திரெங்கானு காவல்துறைத் தலைவர் டத்தோ மஸ்லி மஸ்லான் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset