செய்திகள் மலேசியா
கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை திருமுருகன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா
கோலாலம்பூர்:
கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை திருமுருகன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா விமரிசையாக நடைபெற்றது.
காலை முதல் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. குறிப்பாக பக்தர்கள் பால்குடம் ஏந்தி நேர்த்திக் கடனை பூர்த்தி செய்தனர்.
அபிஷேகம், பூஜைகளுக்கு பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஶ்ரீ சரவணன், பொருளாளர் டான்ஶ்ரீ ராமசாமி, ஆலயத் தலைவர் டத்தோ சுரேஸ் உட்பட திரளான பக்தர்கள் இவ் விழாவில் கலந்துகொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm