நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1 எம்டிபி விவகாரத்தில் நஜீப் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் தவறானவை: ஷாபி அப்துல்லா

கோலாலம்பூர்:

1 எம்டிபி விவகாரத்தில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் துன் ரசாக் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் தவறானவை.

நஜீப்பின் வழக்கறிஞர் முஹம்மது ஷாபி அப்துல்லா இதனை தெரிவித்தார்.

நஜீப் மீது  நான்கு அதிகார துஷ்பிரயோகம், 21 பண மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை.

இன்றைய 2.27 பில்லியன் ரிங்கிட் 1 எம்டிபி ஊழல் வழக்கு விசாரணையின் போது  ஷாபி இந்த சர்ச்சையை எழுப்பினார்.

வழக்கின் முடிவில் திட்டமிடப்பட்ட வாய்வழி வாதங்களின் போது குற்றவியல் குற்றச்சாட்டுகளின் செல்லுபடியாகும் தன்மையைத் தாக்கும் பாதுகாப்புக் குழுவின் விருப்பத்தை மூத்த வழக்கறிஞர் ஷாபி நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்வெராவிடம் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset