நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரோஸ்மாவின் சோலார் வழக்கின் மேல்முறையீடு அக்டோபர் 23, 24ல் விசாரிக்கப்படும்

கோலாலம்பூர்:

ரோஸ்மா மன்சோரின் சோலார் வழக்கு மேல்முறையீடு அக்டோபர் 23, 24 ஆகிய தேதிகளில் விசாரிக்கப்படும்.

துணை அரசு வழக்கறிஞர் போ யீ தின் இதனை தெரிவித்தார்.

1.25 பில்லியன் ரிங்கிட் சோலார்  திட்டத்துடன் தொடர்புடைய மூன்று ஊழல் குற்றச்சாட்டுகளில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, 970 மில்லியன் ரிங்கிட் அபராதம் ஆகியவற்றை ரத்து செய்ய ரோஸ்மா மன்சோரின் மேல்முறையீட்டு செய்துள்ளார்.

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ    நஜீப் ரசாக்கின் மனைவியின் மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு நிர்வாகம் இன்று நடைபெற்றது.

இதில் விசாரணை வரும் அக்டோபர் 23, 24ஆம் தேதிகளில் நடைபெறும் என மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset