செய்திகள் மலேசியா
அஸ்மின் அலியுடன் இணைந்து சுரேந்திரன் போராட்டத்தை தொடரட்டும்: டாக்டர் சத்தியபிரகாஷ்
உலுசிலாங்கூர்:
கெஅடிலான் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் அஸ்மின் அலியுடன் இணைந்து சுரேந்திரன் போராட்டத்தை தொடரட்டும்.
கெஅடிலான் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் இதனை கூறினார்.
கட்சியின் முன்னாள் உதவித் தலைவரான சுரேந்திரன் கெஅடிலானை கடுமையாக சாடியுள்ளார். குறிப்பாக கொள்கை தவறிய கெஅடிலான் கட்சி இறந்து விட்டதாக அவர் கூறியுள்ளார்.
சுரேந்திரன் அவ்வாறு பேசியதில் எந்த அதிர்ச்சியும் இல்லை.
காரணம் அஸ்மின் அலியுடன் இணைந்ததால்தான் அவர் இவ்வாறு பேசுகிறார்.
சுரேந்திரன் போன்றோர் ஒழுக்கம், கொள்கை பற்றி பேசுவது மிகவும் விந்தையாக உள்ளது.
சில கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து ஷெரட்டன் நகர்வு மூலம் அஸ்மில் அலி கட்சிக்கு துரோகம் இழைத்தார்.
அப்படிப்பட்டவருக்கு வழக்கறிஞரான உங்களின் ஒழுக்கமும் கொள்கையும் எங்கே போனது?
நண்பர் சுரேந்திரன் பெர்சத்துவில் அஸ்மினுடன் இணைந்து தனது போராட்டத்தை தொடர வேண்டும்.
இதை நான் அவருக்கு பரிந்துரைக்கிறேன் என்று அவர் டாக்டர் சத்தியபிரகாஷ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm