நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசியக் கூட்டணியில் மலேசிய இந்தியர் மக்கள் கட்சி; மலேசிய இந்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பு: புனிதன்

கோலாலம்பூர்:

மலேசிய இந்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மலேசிய இந்தியர் மக்கள் கட்சியை தேசியக் கூட்டணி அதிகாரப்பூர்வமாக தனது கூட்டணியில் இணைத்துக் கொண்டது. 

தேசியக் கூட்டணி வாரியக் கூட்டத்தில் மலேசிய இந்தியர் மக்கள் கட்சி அதிகாரபூர்வமாக இணைத்துக் கொள்ளப்பட்டது ஒரு வரலாறு ஆகும் என்று அதன் தலைவர் பி. புனிதன் தெரிவித்தார்.

தேசியக் கூட்டணியில் பெர்சத்து, பாஸ்,  கெராக்கான் ஆகிய கட்சி இடம் பெற்றுள்ளன. 

இப்போது இந்த கூட்டணியில் புதிய வரவாக மலேசிய இந்தியர் மக்கள் கட்சி இடம் பெற்றுள்ளது. 

தேசியக் கூட்டணியில் மலேசிய இந்தியர் மக்கள் கட்சியை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்ட டான்ஸ்ரீ மொஹைதின் யாசினுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக புனிதன் தெரிவித்தார். 

நாட்டின் மேம்பாட்டில் இந்திய சமுதாயத்தின் ஒரு போதும் புறக்கணிக்கக் கூடாது. 

குறிப்பாக மலேசிய இந்தியர்களின் உணர்வுகளுக்கு தேசியக் கூட்டணி மதிப்பளித்துள்ளது.

மேலும் மலேசிய இந்தியர்களின் உரிமைக்காக நாங்கள் கடுமையாக போராடுவோம் என்று புனிதன் தெரிவித்தார்.

மலேசிய இந்தியர் மக்கள் கட்சியின் துணைத் தலைவராக சுப்ரமணியம் பதவியேற்றுள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset