செய்திகள் மலேசியா
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மித்ரா மானியம் மறு பரிசீலனை செய்யப்படும்: பிரபாகரன்
கோலகுபு பாரு:
இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் மித்ரா நிதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மானியம் வழங்கப்படுமா என்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என மித்ரா சிறப்புக் குழுத் தலைவர் பிரபாகரன் தெரிவித்தார்.
கடந்தாண்டு 72 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா ஒரு லட்சம் வெள்ளி வீதம் மித்ரா நிதி வழங்கப்பட்டது .
தங்களது தொகுதியில் உள்ள வறுமை கோட்டில் வாழும் மக்களுக்கு உதவும் வகையில் இந்த நிதி பயன்படுத்தப்பட்டது
இவ்வாண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மித்ரா மானியம் ஒதுக்கப்படுமா என்ற கேள்விக்கு அது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று அவர் சொன்னார்.
கடந்த ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினருக்கு மித்ரா நிதி ஒதுக்கப்பட்ட விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm