செய்திகள் மலேசியா
பாலர் பள்ளி, உயர்கல்வி மாணவர்கள், சிறுநீரக நோயாளிகளுக்கு மித்ரா நிதி வழங்கப்படும்: பிரபாகரன்
கோல குபு பாரு:
துணையமைச்சர் டத்தோ இரமணன் மித்ரா தலைவராக இருந்த போது தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், சிறுநீரக நோயாளிகள், உயர்கல்விக் கூடங்களில் பயிலும் பி 40 இந்திய மாணவர்களுக்கு நிதி வழங்கப்பட்டது .
இந்த மூன்று திட்டங்களும் இவ்வாண்டு தொடரும் என்று மித்ரா தலைவர் பிரபாகரன் தெரிவித்தார் .
இந்த மூன்று திட்டங்களும் பயனுள்ள திட்டங்கள் என்பதால் அது தடைபடாமல் தொடரும் என்று அவர் சொன்னார்.
தமிழ்ப் பள்ளியில் பயிலும் பாலர் பள்ளி மாணவர்களுக்கு உதவும் நோக்கம் தொடர வேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சிறுநீரக நோயாளிகள் சுத்திகரிப்பு மேற்கொள்ள அவர்களுக்கும் நிதி தேவைப்படுகிறது.
மேலும், உயர் கல்விக் கூடங்களில் பயிலும் வசதி குறைந்த மாணவர்களின் சுமையைக் குறைக்க கண்டிப்பாக மித்ரா நிதி வழங்கப்படும் என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 1:18 pm
உதவிப் பொருள்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: மலேசியா கண்டனம்
May 3, 2024, 1:17 pm
நாட்டில் டிங்கி காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன: சுகாதார இயக்குனர்
May 3, 2024, 1:17 pm