நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விளையாட்டுப் போட்டிகளின் வாயிலாகவே ஒற்றுமையை வலுப்படுத்த முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்

சிரம்பான்:

விளையாட்டுப் போட்டிகளின் வாயிலாகவே இனங்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்த முடியும்.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் இதனை கூறினார்.

மலேசியாவை தவிர்த்து இந்தியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் இருந்து வெட்ரன் விளையாட்டாளர்கள் இங்கு ஒன்றுக்கூடி உள்ளனர்.

இந்த ஆசிய வெட்ரன் கால்பந்துப் போட்டியை வெற்றிகரமாக ஏற்பாடு செய்திருக்கும் 2020 கால்பந்து குழுவிற்கு எனது வாழ்த்துகள்.

இதுபோன்ற விளையாட்டுகளை நம்மால் வெற்றிகரமாக நடத்த முடியும் என்பதை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

வரும் காலங்களில் இன்னும் அதிகமான போட்டிகள் நடத்தப்பட  வேண்டும்.

இதுபோன்ற போட்டிகளின் வாயிலாகவே இனங்களுக்கு மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset